தென்னிந்திய அரசுகள்
1)பல்லவர் கலை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் யாவை-மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
2) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் செப்பேடு-காசக்குடி செப்பேடு
3) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் இலக்கியங்கள்-மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம்
4) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள்
5) இரண்டாம் சிம்மவர்மனின் மகன்-சிம்மவிஷ்ணு (கி.பி550)
6) சிம்ம விஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன்
7) முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன்
8) இரண்டாம் நரசிம்ம வர்மனின் வேறு பெயர்-ராஜசிம்மன்
9) கடைசி பல்லவ மன்னர்-அபராஜிதன்
10) மன்னர்களின் காலம்
மகேந்திரவர்மன்-(கி.பி 600-630)
முதலாம் நரசிம்மவர்மன்-கி.பி (630-668)
இரண்டாம் நரசிம்மவர்மன்-கி.பி (695-722)
11) களப்பிரர்களை அழைத்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்-சிம்மவிஷ்ணு
12) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி-பரஞ்சோதி (வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார் ,வெற்றிக்குப் பின்னர் சிவ பக்தராக மாறினார்)
13) முதலாம் மகேந்திரவர்மன் ஐ சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்-திருநாவுக்கரசர்
14) திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர்-முதலாம் மகேந்திரவர்மன்
15) திராவிட கட்டட கலை பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது-மகேந்திர பாணி
16) பௌத்தத்தை இழிவுபடுத்துவதாக கருதப்படும் நாடக நூலான மத்தவிலாசப் பிரகசனத்தை சமஸ்கிருத மொழியில் எழுதியவர் யார்-முதலாம் மகேந்திரவர்மன்
17) முதலாம் மகேந்திரவர்மனை வெற்றிகொண்டு வெங்கி எனும் பகுதியை கைப்பற்றியவர் யார்-சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
18) வாதாபியை தீக்கிரையாக்கி இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்தவர்-முதலாம் நரசிம்மவர்மன்
19) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர்-இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்)
20) அவனி சிம்மர் என அழைக்கப்படுபவர்-சிம்மவிஷ்ணு
21) முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்-சங்கீத ஜதி, மத்தவிலாசம், குணபாரன், சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்.
22) முதலாம் நரசிம்மவர்மன் உககு வழங்கப்பட்ட பட்டங்கள்-மாமல்லன், வாதாபி கொண்டான்
23)உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு-1984
24) பல்லவர் கட்டடக்கலையின் வகைகள்-
அ)பாறை குடைவரைக் கோயில்கள்-மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்பம் மண்டபங்களும்-மாமல்லன் பாணி
இ) கட்டுமான கோவில்கள்-ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
25) கூற்று; மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன
காரணம்; ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனி களலிருந்து செதுக்கப்பட்டுள்ளன
மற்றும் ஒவ்வொரு ரதமும் ஐந்து வகையான கோவில் கட்டட பணியை உணர்த்துகின்றன.
(விடை; கூற்று காரணம் இரண்டும் சரி)
26)உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரியது எது-மாமல்லனின் பெருந்தவ வடிவ சிற்பம்
27)ராஜசிம்மஸ்வரம் என அழைக்கப்படும் கோவில்-கைலாசநாதர் கோவில்
28) காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் எவ்வகையைச் சார்ந்தது-நந்திவர்மன் பாணி
29) நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர்- வாத்ஸ்யாயர்(காஞ்சி கடிகையில் ஆசிரியராக இருந்தவர்)
30) தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு -தட்சிணசித்திரம் (முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது)
31)முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்த மாபெரும் சமஸ்கிருத அறிஞர்-தண்டின்
32) தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர்-தண்டின்
33) சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர்-பாரவி
34)கிராதார்ஜீனியம் என்னும் வடமொழி காப்பியத்தை வடிவமைத்தவர்-பாரத
35) பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்கள்-நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரம் ,ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம்
36) இரண்டாம் நரசிம்மவர்மனால் ஆதரிக்கப்பட்டவர்-பெருந்தேவனார் (மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர்)
37) இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் இசை குறித்த கல்வெட்டுகள் யாவை-குடுமியான் மலை, திருமயம் கோவில்களில் உள்ளது
38) புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராட்சாரியார் யாருடைய சமகாலத்தவர்-முதலாம் மகேந்திரவர்மன்
சாளுக்கியர்
39) சாளுக்கியர்களின் தலைநகர்-வாதாபி (பதாமி)
40)சாளுக்கியர்களில் காணப்பட்ட மூன்று வெவ்வேறு சுதந்திர அரசுகள் யாவை-
அ) வாதாபி சாளுக்கியர்கள்
ஆ) வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
இ)கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)
41)வாதாபி குகைக் கல்வெட்டு- மங்களேசன்
42)அய்கோல் கல்வெட்டு-இரண்டாம் புலிகேசி
43) சாளுக்கியர்களை பற்றிய கல்வெட்டுகள்-மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, பட்டடக்கல் விருபாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டு.
44) சாளுக்கியர்களை பற்றிய அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள்
45) பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல் குறுநில மன்னராக இருந்த சாளுக்கிய அரசர்-முதலாம் புலிகேசி
46) முதலாம் புலிகேசியின் மகன்-முதலாம் கீர்த்திவர்மன்
47) சாளுக்கிய மன்னர்களின் காலம்-முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி.566-597)
இரண்டாம் புலிகேசி-(கி.பி.610-642)
முதலாம் விக்ரமாதித்தன்-(கி.பி.655-680)
48) அய்கோல் கல்வெட்டு பற்றிய குறிப்புகள்;
✍️ பாகல்கோட் மாவட்டம் கர்நாடகா லவ் உள்ளது.
✍️ அய்கோலில் உள்ள மேகுதி கோவிலில் உள்ளது.
✍️சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
✍️இக்கல்வெட்டு ஹர்ஷவர்தனர் இரண்டாம் புலிகேசி யால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடுகின்றது.
49) சாளுக்கிய வம்சத்தின் வலிமை பெற்ற அரசர்-இரண்டாம் புலிகேசி
50) இரண்டாம் புலிகேசியின் அவைக்கு தூதுக்குழு அனுப்பிவைத்த பாரசீக அரசர்-இரண்டாம் குஸ்ரு
51)கி.பி.624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்தனுக்கு வழங்கியவர்-இரண்டாம் புலிகேசி
52) முதல் கீழைச் சாளுக்கிய அரசன் யார்-விஷ்ணுவர்த்தனர்
53) இரண்டாம் கீர்த்திவர்மன் ஐ போரில் தோற்கடித்தனர்-தந்தி துர்க்கர்(ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவியவர்)
54) தலைநகரை மன்னிய கேட்டதிலிருந்து கல்யாணிக்கு மாற்றியவர்-முதலாம் சோமேஸ்வரர்(கல்யாணி மேலைச் சாளுக்கியர்)
55)வெசரா பாணியிலான கோவில் விமானங் களை கட்டும் முறை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது-சாளுக்கியர்கள்
56) வாதாபியில் உள்ள விஷ்ணு கோவிலை கட்டியவர்-மங்களேசன்
57) ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி-வாகடகர் பாணி
58)பாரசீக தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்ற காட்சி எங்கு உள்ளது-அஜந்தா ஓவியத்தில்
59) காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட கோவில்-விருபாக்ஷ கோவில்
ராஷ்டிரகூடர்கள் (8-10 ம் நூற்றாண்டு வரை)
60) ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி-கன்னடம்
61) ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்-தந்தி துருக்கர்
62) தந்திதுர்கரை அடுத்து பதவி ஏற்றவர்-முதலாம் கிருஷ்ணர்
63) ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர்-அமோகவர்ஷர்
64) அமோகவர்ஷரின் காலம்-(கி.பி.814-878)
65) அமோகவர்ஷரை சமணத் துறவியாக மாற்றியவர்-ஜினசேனர்
66) அமோகவர்ஷரின் மகன்-இரண்டாம் கிருஷ்ணர்
67)கி.பி.916ல் பராந்தகச் சோழனால் வல்லம் (தற்போதைய திருவல்லம் வேலூர் மாவட்டம்) போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்-இரண்டாம் கிருஷ்ணர்
68)சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியவர்கள்-சாளுக்கியர்கள்
69) வாதாபியில் உள்ள விஷ்ணு கோவிலை கட்டியவர்-சாளுக்கிய அரசன் மங்களேசன்
70) கல்யாணி மேலைச் சாளுக்கியரின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு-இட்டகியில் உள்ள மகாதேவர் கோவில்
71) ராஷ்டிரகூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர்-மூன்றாம் கிருஷ்ணர்
72) சோழர்களை தக்கோலம் போர்க்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர்-மூன்றாம் கிருஷ்ணர்
73) ராமேஸ்வரத்தின் கிருஷ்ணேஷ்வரர் கோவிலை கட்டியவர்-மூன்றாம் கிருஷ்ணர்
74) நாட்டை சரியான முறையில் வைத்திருந்த இராஷ்டிரகூட கடைசி அரசர்-மூன்றாம் கோவிந்தனாவார்
75) கன்னட மொழியின் முதல் கவிதை நூல்-கவிராஜ மார்க்கம்
76) கவிராஜ மார்க்கத்தை இயற்றியவர்-அமோகவர்ஷர்
77) கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள்-ஆதிகவி பம்பா ,ஸ்ரீ பொண்ணா, ரன்னா
78) ஆதிகவி பம்பா வால் இயற்றப்பட்ட நூல்கள்-ஆதிபுராணம்,விக்கிரமார்ஜுன விஜயம்
79)முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை சித்தரிக்கும் நூல்-ஆதி புராணம்
80) மகாபாரதத்தின் மீள் தருகை-விக்கிரமார்ஜுனவிஜயம்
81) தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்ஜுனனின் பாத்திரத்தில் பொருத்தி எழுதியவர்-பம்பா
82)ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை காணப்படும் இடங்கள்-எல்லோரா, எலிபெண்டா
83) எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது-மூன்றாம் கிருஷ்ணர்
84) எல்லோரா கைலாசநாதர் கோவில் பற்றிய குறிப்புகள்-
✍️ கட்டடக்கலை பிரம்மாண்டதிர்க்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றது.
✍️60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது
✍️ விமானத்தின் உயரம் 90 அடி
✍️ மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் சாயலை பெற்றுள்ளது
✍️ திராவிட கட்டடக்கலை கூறுகளை கொண்டுள்ளது
85) எலிபண்டா தீவு பற்றிய குறிப்புகள்
✍️இயற்பெயர் -ஸ்ரீ பூரி
✍️உள்ளூர் மக்களால் காரப்புரி என்று அழைக்கப்படுகிறது.
✍️மும்பைக்கு அருகில் உள்ள ஒரு தீவு.
✍️இத்தீவில் பெரிய யானையின் உருவத்தை கண்ட போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு எலிபண்டா தீவு என பெயரிட்டனர்.
✍️திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட )சிவன் சிலை மற்றும் நுழைவு வாயிலில் காணப்படும் துவாரபாலகர்கள் சிலை குறிப்பிடத்தக்கவை.
86) சமண நாராயணர் கோவிலும் காசி விஸ்வேஸ்வரர் கோவிலையும் கட்டியவர்கள்-ராஷ்டிரகூடர்கள்
87) இஸ்லாமிய பேரரசின் மகத்தான நகரம்-பாக்தாத்
Comments