பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம்

1) மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டும் சொல்-சங்கம்

2) தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள்-ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, உ வே சாமிநாதர்

3) பொருத்துக
அ)இயற்கை வரலாறு- பிளினி
ஆ) புவியியல் -தாலமி
இ )இண்டிகா -மெகஸ்தனிஸ்

4) தமிழ் மொழியானது லத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனக் கூறியவர்-ஜார்ஜ் எல் ஹார்ட்

5) சங்க காலத்தின் போது தமிழக பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள்-மூவேந்தர்கள்

6) சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்-பதிற்றுப்பத்து

7) வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று சேர அரசன்-சேரன் செங்குட்டுவன்

8) சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தவர்-சேரன் செங்குட்டுவன்

9) பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-சேரன் செங்குட்டுவன்

10) இளங்கோவடிகளின் தம்பி-சேரன் செங்குட்டுவன்

11) தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்-சேரல் இரும்பொறை

12) முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்-உதியன் சேரலாதன் ,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்்்், சேரன் செங்குட்டுவன் ,சேரல் இரும்பொறை

13) சோழநாட்டின் மையப்பகுதியாக விளங்கியது-காவிரி கழிமுகப் பகுதி

14) சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர்-கரிகால் வளவன்

15)சேரர் பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்க்கடித்தவர்-கரிகாலன்

16)கரிகாலனின் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்கும் நூல் எது-பட்டினப்பாலை

17) கரிகாலன் கட்டிய கல்லணை எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது-69000

18) இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்-பாண்டியர்கள்

19) மிகவும் புகழ்பெற்ற போர் வீரராக போற்றப்படும் பாண்டிய அரசன்-நெடுஞ்செழியன்

20) சேரர் சோழர் 5 வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையாலங்கானம் எனுமிடத்தில் தோற்க்கடித்தவர்-நெடுஞ்செழியன்

21) கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்-நெடுஞ்செழியன்

22) பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர்-முதுகுடுமிப் பெருவழுதி

23) சேர அரசு அதிகாரத்தின் சின்னங்கள்-
மாலை- பனம் பூ
துறைமுகம்- முசிறி/ தொண்டி
தலைநகர் -வஞ்சி /கரூர்
சின்னம் -வில் ,அம்பு

24) சோழ அரசின்  சின்னங்கள்-
மாலை -அத்திப்பூ
துறைமுகம் -புகார்
தலைநகர் -உறையூர்/ புகார்
சின்னம் -புலி

25) பாண்டிய அரசின் சின்னங்கள்
மாலை -வேப்பம்பூ மாலை
துறைமுகம் -கொற்கை
தலைநகர்- மதுரை
சின்னம் -இரண்டு மீன்கள்

26) பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர்-வேளிர்கள்

27) கிராமத் தலைவர்-கிழார்

28)சங்க காலத்தில் பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது-அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா

29) சங்க காலத்தில் நிலவருவாய் எவ்வாறு அழைக்கப்பட்டது-இறை

30) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு-ஐம்பெருங்குழு

31) 8 உறுப்பினர்களை கொண்ட குழு-எண்பேராயம்

32) சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்-தானைத் தலைவன்

33) தோமரம் எனப்படுவது-எரியீட்டி (சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவது ஆகும்)

34) சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது-படை கொட்டில்

35)
மண்டலம்>நாடு>கூற்றம்>கிராமம்

36) பொருத்துக
அ)பேரூர் -பெரிய கிராமம்
ஆ)சிற்றூர் -சிறிய கிராமம்
இ)மூதூர் -பழமையான கிராமம்

37) கடற்கரையோர நகரங்களை எவ்வாறு அழைக்கப்பட்டது-பட்டினம்

38) துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல்-புகார்

39)மருதநிலம் மின்புலம் என அழைக்கப்பட்டது. நெய்தல் தவிர மற்றவை என அழைக்கப்பட்டது.

40) குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் -வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை -வறண்ட நிலம் 

41) குறிஞ்சி -வேட்டையாடுதல் /சேகரித்தல்
முல்லை -ஆநிரை மேய்த்தல்
மருதம்- வேளாண்மை
நெய்தல் -மீன்பிடித்தல்/ உப்பு உற்பத்தி
பாலை- வீரச் செயல்கள்

42) குறிஞ்சி -குறவர் ,குறத்தியர்
முல்லை- ஆயர் ,ஆய்ச்சியர்
மருதம் -உழவன் ,உழத்தியர்
நெய்தல் -பரதவர் ,நுளத்தியர்
பாலை -மறவர் ,மறத்தியர்

43) குறிஞ்சி -முருகன் 
முல்லை -மாயோன் 
மருதம் -இந்திரன் 
நெய்தல் -வருணன் 
பாலை -கொற்றவை

44) சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை-40

45) சங்ககால பெண்பாற் புலவர்கள்-ஔவையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்

46) மக்களின் முதன்மை கடவுள்-சேயோன்அல்லது முருகன்

47) போரில் மரணமடைந்த வீரனின் நினைவை போற்றுவதாக நடப்பட்டவை-வீரக் கல் /நடுகல்

48) இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றவர்-கரிகாலன் (ஏழிசை வல்லான்)

49) எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ் இன் பதப்படுத்தப்பட்ட உடலில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய பொருள்-மலபார் கரு மிளகு

50) இந்திய பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என கூறியவர்-ரோமப் பேரரசர் ஆரிலியன்


51)முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என தனது நூலில் குறிப்பிட்டவர்-பிளினி (இயற்கை வரலாறு)

52) அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டு இருந்த இடம்-முசிறி

53)அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த நடிகருக்கும் முசிறியைச் சேர்ந்த வணிகருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் குறித்து எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் (வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது)

54) சங்ககாலம் சரிவை சந்திக்க தொடங்கிய நூற்றாண்டு-கிபி 3 நூற்றாண்டு

55) சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள்-களப்பிரர்கள்

56)சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் உருவான புதிய எழுத்து முறை எது-வட்டெழுத்து முறை





Comments

Popular posts from this blog

6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

தென்னிந்திய அரசுகள்

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்