பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம்
1) மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டும் சொல்-சங்கம்
2) தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள்-ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, உ வே சாமிநாதர்
3) பொருத்துக
அ)இயற்கை வரலாறு- பிளினி
ஆ) புவியியல் -தாலமி
இ )இண்டிகா -மெகஸ்தனிஸ்
4) தமிழ் மொழியானது லத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனக் கூறியவர்-ஜார்ஜ் எல் ஹார்ட்
5) சங்க காலத்தின் போது தமிழக பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள்-மூவேந்தர்கள்
6) சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்-பதிற்றுப்பத்து
7) வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று சேர அரசன்-சேரன் செங்குட்டுவன்
8) சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தவர்-சேரன் செங்குட்டுவன்
9) பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-சேரன் செங்குட்டுவன்
10) இளங்கோவடிகளின் தம்பி-சேரன் செங்குட்டுவன்
11) தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்-சேரல் இரும்பொறை
12) முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்-உதியன் சேரலாதன் ,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்்்், சேரன் செங்குட்டுவன் ,சேரல் இரும்பொறை
13) சோழநாட்டின் மையப்பகுதியாக விளங்கியது-காவிரி கழிமுகப் பகுதி
14) சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர்-கரிகால் வளவன்
15)சேரர் பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்க்கடித்தவர்-கரிகாலன்
16)கரிகாலனின் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்கும் நூல் எது-பட்டினப்பாலை
17) கரிகாலன் கட்டிய கல்லணை எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது-69000
18) இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்-பாண்டியர்கள்
19) மிகவும் புகழ்பெற்ற போர் வீரராக போற்றப்படும் பாண்டிய அரசன்-நெடுஞ்செழியன்
20) சேரர் சோழர் 5 வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையாலங்கானம் எனுமிடத்தில் தோற்க்கடித்தவர்-நெடுஞ்செழியன்
21) கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்-நெடுஞ்செழியன்
22) பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர்-முதுகுடுமிப் பெருவழுதி
23) சேர அரசு அதிகாரத்தின் சின்னங்கள்-
மாலை- பனம் பூ
துறைமுகம்- முசிறி/ தொண்டி
தலைநகர் -வஞ்சி /கரூர்
சின்னம் -வில் ,அம்பு
24) சோழ அரசின் சின்னங்கள்-
மாலை -அத்திப்பூ
துறைமுகம் -புகார்
தலைநகர் -உறையூர்/ புகார்
சின்னம் -புலி
25) பாண்டிய அரசின் சின்னங்கள்
மாலை -வேப்பம்பூ மாலை
துறைமுகம் -கொற்கை
தலைநகர்- மதுரை
சின்னம் -இரண்டு மீன்கள்
26) பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர்-வேளிர்கள்
27) கிராமத் தலைவர்-கிழார்
28)சங்க காலத்தில் பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது-அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா
29) சங்க காலத்தில் நிலவருவாய் எவ்வாறு அழைக்கப்பட்டது-இறை
30) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு-ஐம்பெருங்குழு
31) 8 உறுப்பினர்களை கொண்ட குழு-எண்பேராயம்
32) சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்-தானைத் தலைவன்
33) தோமரம் எனப்படுவது-எரியீட்டி (சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவது ஆகும்)
34) சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது-படை கொட்டில்
35)
மண்டலம்>நாடு>கூற்றம்>கிராமம்
36) பொருத்துக
அ)பேரூர் -பெரிய கிராமம்
ஆ)சிற்றூர் -சிறிய கிராமம்
இ)மூதூர் -பழமையான கிராமம்
37) கடற்கரையோர நகரங்களை எவ்வாறு அழைக்கப்பட்டது-பட்டினம்
38) துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல்-புகார்
39)மருதநிலம் மின்புலம் என அழைக்கப்பட்டது. நெய்தல் தவிர மற்றவை என அழைக்கப்பட்டது.
40) குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் -வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை -வறண்ட நிலம்
41) குறிஞ்சி -வேட்டையாடுதல் /சேகரித்தல்
முல்லை -ஆநிரை மேய்த்தல்
மருதம்- வேளாண்மை
நெய்தல் -மீன்பிடித்தல்/ உப்பு உற்பத்தி
பாலை- வீரச் செயல்கள்
42) குறிஞ்சி -குறவர் ,குறத்தியர்
முல்லை- ஆயர் ,ஆய்ச்சியர்
மருதம் -உழவன் ,உழத்தியர்
நெய்தல் -பரதவர் ,நுளத்தியர்
பாலை -மறவர் ,மறத்தியர்
43) குறிஞ்சி -முருகன்
முல்லை -மாயோன்
மருதம் -இந்திரன்
நெய்தல் -வருணன்
பாலை -கொற்றவை
44) சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை-40
45) சங்ககால பெண்பாற் புலவர்கள்-ஔவையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்
46) மக்களின் முதன்மை கடவுள்-சேயோன்அல்லது முருகன்
47) போரில் மரணமடைந்த வீரனின் நினைவை போற்றுவதாக நடப்பட்டவை-வீரக் கல் /நடுகல்
48) இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றவர்-கரிகாலன் (ஏழிசை வல்லான்)
49) எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ் இன் பதப்படுத்தப்பட்ட உடலில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய பொருள்-மலபார் கரு மிளகு
50) இந்திய பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என கூறியவர்-ரோமப் பேரரசர் ஆரிலியன்
51)முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என தனது நூலில் குறிப்பிட்டவர்-பிளினி (இயற்கை வரலாறு)
52) அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டு இருந்த இடம்-முசிறி
53)அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த நடிகருக்கும் முசிறியைச் சேர்ந்த வணிகருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் குறித்து எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் (வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது)
54) சங்ககாலம் சரிவை சந்திக்க தொடங்கிய நூற்றாண்டு-கிபி 3 நூற்றாண்டு
55) சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள்-களப்பிரர்கள்
56)சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் உருவான புதிய எழுத்து முறை எது-வட்டெழுத்து முறை
Comments